Saturday, February 15, 2014

உன் காதில் விழுந்ததுண்டா.?

பெப்சி குடித்ததால் உயிர் இழந்த சிறுவர்கள்..!

இன்னும் எத்தனை பலி....?

குடிக்காதிங்கடா குடிக்காதிங்கடா.. 
எத்தனை அறிவுறுத்தல்கள்.?
தடை செய் தடைசெய்..
எத்தனை போராட்டங்கள்.?
எவனாவது கேட்டானா.?
எந்த அரசாவது செவி சாய்த்ததா.?

இன்று பெப்சி குடித்த சிறுமி ரத்தம் கக்கி உயிரிழந்தாள். மேலும் இரண்டு குழந்தைகள் ரத்தம் கக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமணையில். ஆசையோடு தனது நான்கு குழந்தைகளுக்கு வாங்கிகொடுத்த தந்தைக்கு தெரியவில்லை, அது நஞ்சு என்பது. கடலூர் மாவட்டம், சேப்ளாநத்ததில்தான் இந்த துயரம். ஷாருக்கான சொன்னான், தெண்டுல்கர் சொன்னான், மாதவன் சொன்னான் மயிரான் சொன்னானு குடிச்சிங்களேய்யா.? இனியாவது திருந்தி தொலைங்கய்யா. இளநீர் விற்பனிடம் அரை மணிநேரம் பேரம் பேசுவாயே, மறுவார்த்தை பேசாம பெப்சி கோக்கை பெறுமையா வாங்கி குடும்பத்தோடு குடிப்பாயே, இங்குள்ள முற்போக்கு இயக்கங்களின் குரல் உன் காதில் விழுந்ததுண்டா.? இனி அந்த பாணங்கள் மட்டுமல்ல, அதை பரிந்துரை செய்பவனும் உனக்கு எதிரானவன், உனக்கு சொரணை இருந்தால்...!
Link:http://www.dinamalar.com/news_detail.asp?id=913898
 — with Palaniswamy Karuppanan.

0 கருத்துரைகள்:

Post a Comment