Thursday, August 15, 2019

புதுக்கவிதை முனைவர்.இரா.குணசீலன்.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)


முன்னுரை
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பாஆசிரியம்வஞ்சி,கலிபரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
·         புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்
·         பழையன கழிதலும் புதியன புகுதலும்
        வழுவல கால வகையினானே  என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல்

யாப்புச் சிம்மாசனம்

எதுகைப் பல்லக்கு

தனிமொழிச் சேனை

பண்டித பவனி

இவை எதுவுமில்லாத

கருத்துக்கள் தம்மைத் தாமே

ஆளக் கற்றுக்கொண்ட புதிய

மக்களாட்சி முறையே புதுக்கவிதை

எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம்
        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
·         ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு‘புதிதாக்கு’ (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.
·         “சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார்பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே,ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன்,இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட்போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில்‘வசன கவிதை’ என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை’லகு கவிதை’ விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.
புதுக்கவிதையின் வளர்ச்சி
வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்றபுதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத்தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால்காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும்.பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி,கு.ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன்,போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்துதமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.
புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1.        மணிக் கொடிக் காலம்
2.        எழுத்துக் காலம்
3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில்தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப்பொலிவூட்டின
1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ்மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன்,சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள்புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன.  இவற்றுள்மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால்இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர்.இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான.பிச்சமூர்த்திகு..ராசகோபாலன்,.நாசுப்பிரமணியன்புதுமைப்பித்தன் போன்றோர்மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாக விளங்கினர்.
 2.எழுத்துக் காலம்
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை,கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில்புதுக்கவிதையை வளர்த்தன.ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்துவைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில்தொடர்ந்ததுமயன்சிட்டிவல்லிக்கண்ணன்,ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,  .நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்குசிறப்பு சேர்த்தனர்
3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலியஇதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமைதந்து வெளியிட்டன. புவியரசுஞானி,முல்லைஆதவன்அக்கினிபுத்திரன்சிற்பிகங்கைகொங்காண்டான்தமிழ்நாடன்சக்தி கனல்,மு.மேத்தாதமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர்வானம்பாடிக் கவிஞர்களாவர்
                                   
        சில புதுக்கவிதைச் சான்றுகள்
  நல்ல காலம் வருகுது                                                               உன்கையிலா கடிகாரம்?
   நல்ல காலம் வருகுது                                                                கடிகாரத்தின் கையில்
  தெருவிலே நிற்கிறான்                                                                            நீ!
குடுகுடுப்பைக் காரன்!                                           

முடிவுரை
 மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாததுஎன்பதற்குத் தக்க சான்றாக புதுக்கவிதை வளர்ச்சியைக்கூறலாம். மேற்கண்ட கட்டுரையின் வழியாக தமிழில்புதுக்கவிதையின் தோற்றத்தையும்அதன்வளர்ச்சியையும் நன்கு உணரலாம். mybrotherunathamizhblogspot.com

0 கருத்துரைகள்:

Post a Comment