திட்டுவாங்காமலும் ...
வருடத்தில் ஒரு முறை இவர்களுக்கு மகிழ்ச்சி
ஆசிரியரிடமிருந்தும்
பெற்றோரிடமிருந்தும்
அடி வாங்காமலும்
இருக்கும் நாள்
அந்த நாள் இந்த நாள்
என்னவென்று தெரியுமா!
குழந்தைகள் தின விழா
அப்பாடா எப்படியோ
இன்றைக்காவது
நிம்மதியா விட்டாங்களே! என்று
எண்ணும் குழந்தைகளையும்
எண்ணாமல்
ஏங்கித் தவிக்கும்
குழந்தைகளையும்
நினைத்துப் பார்க்க வேண்டும்
மனதார
அவர்கள் வாழ்க்கைக்குச் சிறு கடுகளவாவது
உதவி செய்ய முன் வந்தால் ,
மனித இனம் மதிப்போடு
இவ்வையத்தில் வாழும்...