Thursday, September 8, 2011

நிலையாமை

 கருவறையில் பிறந்து
கல்லறையில் முடியும்
வாழ்வில் காலம் ஒரு விளையாட்டு -அந்த
கால விளையாட்டில்
நாமெல்லாம் நாயகன்கள்,நாயகிகள்
நடிப்பு மட்டுமே இவ்வரங்கில் -வேறு
எந்தவொரு பொருளும் சொந்தமில்லை
அதற்குள் எதற்கு- இந்த
கணக்கு பிணக்கு பார்க்க ஆரம்பித்தோம்
என்றால் கால் வழி  கூட கடக்க முடியாது.