Monday, December 3, 2012

இதயத்தின் உதயம்


என் இதயமெனும்
 வீணையை
வாசிக்கத் தெரிந்த
கலைமகள்- நீ  தான்
என்
அலையில் வந்த
 கலையே 
உன்னால் இனிமையானது
 எந்தன்  இதயம்  

Wednesday, November 14, 2012

என்று மாறும் இந்த நிலை


திட்டுவாங்காமலும் ...

வருடத்தில் ஒரு  முறை இவர்களுக்கு மகிழ்ச்சி



ஆசிரியரிடமிருந்தும்
பெற்றோரிடமிருந்தும்

 அடி வாங்காமலும்

இருக்கும் நாள்

அந்த நாள் இந்த நாள்
என்னவென்று தெரியுமா!
குழந்தைகள் தின விழா

அப்பாடா எப்படியோ

இன்றைக்காவது

நிம்மதியா விட்டாங்களே! என்று

எண்ணும் குழந்தைகளையும்

எண்ணாமல்

 ஏங்கித் தவிக்கும்
குழந்தைகளையும்
நினைத்துப் பார்க்க வேண்டும்

மனதார
அவர்கள் வாழ்க்கைக்குச் சிறு கடுகளவாவது

உதவி செய்ய முன் வந்தால் ,

மனித இனம் மதிப்போடு

இவ்வையத்தில் வாழும்...

Tuesday, August 14, 2012

சுதந்திர காற்று எங்கே?


சுதந்திரம் பெயருக்கு மட்டும் தான்
வறுமையின் மனம் இன்னும் வாடிக்கொண்டிருக்கையில்
வளர்ந்துவிட்டோம் என்று சொல்வதில் நியாயம் என்ன?
எங்கே எதில் வளர்ந்தோம்
அறிவியல் வளர்ச்சி மேலோங்க மேலோங்க ...
மனித வளர்ச்சி இன்று மண்மூடிக் கொண்டிருப்பதை
அறிந்தும் அறியாமல் உலக அரங்கில் நடைபோட்டுக்கொண்டிருக்கின்றோம்......ஆக நாம்
சிந்திக்கவும் செயல்படுத்தவும் முன் வந்தோம் என்றால்
சுதந்திரம் உயிர் பெறும்.
அப்போது தான் _ இவர்களின்
புலம்பலுக்கு புது வழி கிடைக்கும்.
அறிவு வளர்ச்சி ......
1.மரம்(மனம்) அழிவதால்
 குருவி(மனிதன்) புலம்பல்
கூடுகட்ட (வாழ்க்கை) இடமில்லையே .......


Tuesday, July 10, 2012

குப்பையை வைக்காதே

நம்மில் பலர் மற்றவர்களை குறைகூறிக் கொண்டு வருகின்றோம்.-ஆனால்
நம்மை பற்றி நாம் சிந்திப்பது கிடையாது.
சிந்தனை செய் மனமே!

அடுத்தவர்களின் குறைகளைப் பற்றிஆயிரம் சொல்வோம்-நம்
குறைபற்றி நாம் சொல்ல முயல்வது கிடையாது
அமைதியாக இருப்போம்.
இது தான் இன்றைய போக்கு
இந்த நிலைமாற வேண்டும்
குறைகளை கூறும் குப்பை மனமே!
நிறைகளை கூறி  நிம்மதியாக வாழ்வாய்


வள்ளுவர்குறள்;
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

Thursday, July 5, 2012

புதுமுக வகுப்பு


வலையுலக நண்பர்களே

அனைவருக்கும் வணக்கம்

கடந்த 02.07.2012 அன்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இணைந்து விட்டேன்

Tuesday, April 24, 2012

காதல் செய்யுங்கள்

இனிய நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.


காலம் அனைத்தையும்


வெல்லும் ஆற்றல் படைத்தது
.
உயிர் இருக்கும் வரை இணைந்திரு
உடல் ஒரு பூ போன்றது

தினமும் நம்மை சுற்றி
 எத்துணை நிகழ்வுகள் நடக்கின்றன

அவைகளில்சில நமக்கு பிடிக்கின்றன.

சில பிடிக்காமல் போகின்றன





இதற்கெல்லாம்  ஒரே    காரணம்

அவைகளை  அலட்சிய படுத்துவது  தான் ...

ஆக அவைகளை நாம்

இரசிக்க கற்றுக் கொள்ளவதற்கு முன்

பசியும்,இரசனையும் வர வேண்டும் -அப்படி வந்தால்
ருசி என்ற காதல் பிறக்கும்
அப்போது வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும்.............

தேனாகும்-அது விருந்தாகும் எல்லோருக்கும்

உங்கள் வாழ்க்கை வசந்தமாக
காதல் செய்யுங்கள்
காலம் கை கூப்பும்..........



 

Thursday, March 1, 2012

அழகின் முகவரி



 அனைவரும் நலம்தானே

அன்னையின் அன்பு மொழியில்


அத்தையில் தொடங்கி ஆத்தா வரை
அகலப் பேசும் அன்பு முகவரி


சாதி மதப்பேதமில்லா சமத்துவ முகவரி
சாட்சிக்காரனும் சண்டைக்காரனும் அறியாத


சமத்து முகவரி குழந்தை பேச்சு முகவரி...


அன்பு முகவரியில் அடிமை தனத்தையும்