Thursday, July 14, 2011

பேச துடிக்கும் இதயம்-

வண்ண நீர் தெளிச்சு
மயில் தோகை கூந்தலிட்டு
வார்த்தைகள் பேச துடிக்கும்-உன்
இதழ் சொல்லும் துடிப்பு
இமைகள் மூடிய போதும் -உன்
விழிக்கு வழி விடு என்னுடன் பேச...
கருவறையில் பிறந்து
கல்லறையில் மறையும் உயிரினமே!
உன்னை நினைக்கும் போது-என்
உள்ளம் உருக்குலையுது
உன் பேச்சு-அதுவே
என் மூச்சு
ஆசையெனும் ஈரெழுத்தில் தோன்றி
காதலெனும் மூன்றெழுத்தில் வாழும் உயிரே!
வாடாத மனமே-உன்
வாழ்க்கை வளமாகும் தருணம் வந்துவிட்டது.
பேச துடிக்கும் இதயமே! பேசு
இனி வசந்தமே! வண்ணப் புள்ளி கோலமிட்டு அலங்கரிக்கும் நேரம் 

Tuesday, July 5, 2011

கவிதை

வார்தைகள் முட்டிக்கொள்ளும் காதல்
வாசிப்புகள் பேசும் முத்தம்
கண் பார்க்கும்-அந்த
காதல் பார்வை
கை விரல் தொடும்
உணர்ச்சி-அதுவே
புணர்ச்சியாக வரும்
இரசித்து ரசித்து வ்ரும்
ருசி பார்க்க
நான் கொண்ட பசியால் வந்தது-தான்
ஓவியம்-அதுவே
கலையாத சித்திரம்
கண்ணை பறிக்கும்
 பூங்கொத்து-என்
மனதை மாற்ற-வந்த
தமிழ் கொத்தே
என் சொத்தே   ----கவிதை----