Tuesday, November 9, 2010

தமிழ்வாழ்த்து

தமிழ்வாழ்த்து
அன்பு உருவமெடுத்து வந்த அன்னைத் தமிழே!
ஆன்றோர் போற்றிய அருந்தமிழே!
இன்பத்தின் ஊற்றாகிய விருந்தமிழே!
ஈன்றவர் நெஞ்சில் வாழும் உள்ளத்தமிழே!
உலகோர் விரும்பி ஏற்கும் விந்தைத் தமிழே!
ஊரறிய வந்த உண்மைத் தமிழே!
எண்ணங்களை ஒருமுகப்படுத்திய விளக்குத் தமிழே!
ஏறுமுகம் கண்ட வெற்றித்தமிழே!
ஐந்தாய் அவதரித்த இயற்கைத்தமிழே1
ஒன்றாய் விளங்கும் தமிழே!
ஓவியமாய் உலவும் தமிழே!
ஒளவை  வாயில் அழங்காரமாய் வந்த அழகுத்தமிழே!
அதன்வழியில் வலம் வர உம் பாதம்தொட்டு தொடங்குகின்றேன்.

0 கருத்துரைகள்:

Post a Comment