Friday, October 28, 2011

கடவுள் படைத்த கடைசி பிறவி


அறிவுக்கு வளர்ச்சியையும்
ஆற்றலுக்குஉணர்ச்சியையும்
கடவுள் படைத்த கடைசி பிறவி
இன்பத்துக்கு இணைப்பை ஊட்டும்
ஈகை குணம் கொண்ட பிறவி
உறவுகளை இணைக்கும் மேம்பாடும்
ஊரார்களின் உன்னத பண்பாடும்
எண்ணங்களை உரமாக்கும் நாகரிகமும்
ஏறுமுகமாய் வாழும் ஆறாம் அறிவு -நம்மையாளும் அறிவு
ஐம்பூதங்களின் இயற்கை பிறவி
பகத்துண்டு வாழும் பாரம்பரியமும்
வந்தாரை வரவேற்கும் விருந்தோம்பலும் கொண்ட பிறவி
ஒற்றுமையை விதையாக்கி
உறவுகளை உரிமையாக்கி
உள்ளுயிரை உரமாக்கும்
 உண்மை பிறவி
 உயிருள்ள பிறவி
கடவுள் படைத்த கடைசி பிறவி
கருணையுள்ளம் கொண்ட பிறவி
கடவுள் படைத்த கடைசி பிறவிமனிதப்பிறவி எல்லா உயிரினமும்
மதிக்கும் பிறவி





Sunday, October 23, 2011

எது தீபாவளி?

புத்தாடை உடுத்தி
புதுமையான நடைமுறையை பயன்படுத்தி -அதை
வாழ்வில் புகுத்தி
பூமியை நாசம் செய்வதா?
சப்தங்களும்,வெடிகளும்
சாலையில் சங்கீதம் பாடுவதா?

அணுகுண்டு வெடி
ஆட்களையே அலற செய்வதா!


நரகாசுரன் அழிவு

மக்கள் முகத்தில் மகிழ்ச்சி
இருள் விலகி
ஒளி வந்தது

இயற்கை ஒளி
செயற்கை ஒளியானதால்
நகரெல்லாம்
மாசுக்காற்றுக்கு ஒளிவந்தது

வாழ்க்கை
மனதில் ஒளியில்ல
வெடிகளும்,வெளிச்சமும்
பட்டாசு வந்ததால்
வேடிக்கையும்,விநோதமானது


எது தீபாவளி

மனதில் ஒளியில்லை

மண்ணில் மலர்வது ஒளியல்ல
மனதில் மலர்வது ஒளி
நினைவில் நிற்பது-அதன்
வளி
மனதில் உறைந்து
நாவினில் நிறைந்து
கண்ணில் கரைந்து-மற்றவர்
மனதில் மலர்வதே
தீபாவளி


தீபாவளி திருவிழா என்பது
மனித உயிரினங்களின் மனதின் தீபத்திருவிழா ஆனால் வளர்ந்து வரும் சமூகம்
வெடிகளும் வெளிச்சமும் தீபாவளி ஆகி விடுகிறது

ஆகவே மனித சமூகம் செயற்கை சுவாசிக்காமல்
இயற்கையான
 உள்ளம் என்னும் தீபத்தை மனதில் ஏற்றினால்
வாழ்க்கை ஒளியாகும்
இது உணர்ந்தால்
உங்கள் வாழ்க்கைக்கு வழியாகும் 


தீபாவளி வாழ்த்துகள்......