Thursday, December 2, 2010

சிந்தியுங்கள் சாதனையை சந்தியுங்கள்

 பொய் என்ற போதும்
உண்மை பேச துடிக்கும்
மனித குலம்
உண்மை பேச என்றும்
துணிவதில்லை-அதற்காக
அமைதியே என் வழியென்று
சொல்லிக்கொண்டு செல்லும்
மனிதகுலம்
இந்நிலையில் நம் வாழ்வு
எங்ஙனம் அமையும்.
நாளைய வருங்காலத்தை
வளமானதாக்கவும்,
நாளைய சமுதாயத்தை
ஒழுக்காக்கவும்,
 சிந்தியுங்கள் சாதனையை சந்தியுங்கள்

Wednesday, December 1, 2010

வசந்த கால அலை

 அன்பும் அமைதியும் -என்னை
அழகானதொரு-அந்த
வசந்த காலத்திற்கு
கூட்டிச்செல்கிறது
அங்கே
கடல் அலையும்-என்
மன அலையும் 
மாறி மாறி
பயணிக்கிறது...
நினைவுகள் பல-என்
கண் இமைகளை தடவிச் செல்கிறது.
இருவிழி திறக்கும் முன்
இதயத்தின் ஊற்று திறந்து
அது பிறந்து
வசந்த கால அலை வீச தொடங்கியது.