Saturday, January 1, 2011

புதிய எழுச்சி

அன்னை வழியிலே அனைவரும் நடக்க வேண்டும்
ஆன்றோர் சொல் படி கேட்க வேண்டும்
இன்முகத்தோடு அனைவரும் ஏற்க வேண்டும்
ஈன்ற நெஞ்சம் குளிர வேண்டும்
உண்மையாய் வாழ வேண்டும்
ஊர் புகழ வேண்டும்
எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும்
ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழ வேண்டும்
ஒரே வழி அது நல்வழி பின்பற்ற வேண்டும்
ஓதல் தான் சிறந்ததென நம்ப வேண்டும்
சமத்துவமே- நமது
தத்துவமென நிலை மாற வேண்டும்
சாக்கடை போல் ஓடாது
பூக்கடை போல் மணக்க வேண்டும்
சாதனைகள் பல புரிந்திட வேண்டும்-நம்
சோதனைகள் பல அகன்றிட வேண்டும்
சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்
தரித்திர பிசாசு நம்மை விட்டு அகழ  வேண்டும்
வாழ்க்கை வாழ்வதற்கே !
வளம் பெறுவதற்கே!
வரலாறு படைப்போம்
புதிய எழுச்சியுடன் புறப்படுவோம்
புதிய நோக்கில்-நம் பயணம் பயணிக்கட்டும்.....