ஆட்சிக்காலம் | கி.பி 1790- கி.பி 1799 |
---|---|
முடிசூட்டு விழா | கி.பி 1790 |
முன்னிருந்தவர் | ஜெகவீர கட்டபொம்மன் |
அரச வம்சம் | நாயக்க மன்னர் |
தந்தை | ஜெகவிர கட்டபொம்மன் |
ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில்பிறந்தவர்
வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 30 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.
குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.
இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
பாரதி சொல்வதற்கு முன்னாலே,
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டவனாக வாழ்ந்த வீரத்தமிழன்வீரபாண்டிய
கட்டபொம்மனுக்கு
இன்று பிறந்த நாள் இந்நாளில் அவனுடைய வீரச்சிறப்பு, ஆங்கிலேயரை எதிர்த்துப் பேசிய வசனங்களையெல்லாம் எண்ணி பார்க்க வேண்டும்.அப்போது தான் நம் விடுதலை பெற்றதிற்கு நன்மை கிடைக்கும்.
எண்ணுங்கள்...
தனக்கென வாழாது நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்
அடிமை நிலையை விரட்ட எண்ணிய பாஞ்சாலங்குறிச்சி வீரன்.
கயத்தாறு கண்ணீர் விட்டது இவன் இறப்புக்காக,