Sunday, October 23, 2011

எது தீபாவளி?

புத்தாடை உடுத்தி
புதுமையான நடைமுறையை பயன்படுத்தி -அதை
வாழ்வில் புகுத்தி
பூமியை நாசம் செய்வதா?
சப்தங்களும்,வெடிகளும்
சாலையில் சங்கீதம் பாடுவதா?

அணுகுண்டு வெடி
ஆட்களையே அலற செய்வதா!


நரகாசுரன் அழிவு

மக்கள் முகத்தில் மகிழ்ச்சி
இருள் விலகி
ஒளி வந்தது

இயற்கை ஒளி
செயற்கை ஒளியானதால்
நகரெல்லாம்
மாசுக்காற்றுக்கு ஒளிவந்தது

வாழ்க்கை
மனதில் ஒளியில்ல
வெடிகளும்,வெளிச்சமும்
பட்டாசு வந்ததால்
வேடிக்கையும்,விநோதமானது


எது தீபாவளி

மனதில் ஒளியில்லை

மண்ணில் மலர்வது ஒளியல்ல
மனதில் மலர்வது ஒளி
நினைவில் நிற்பது-அதன்
வளி
மனதில் உறைந்து
நாவினில் நிறைந்து
கண்ணில் கரைந்து-மற்றவர்
மனதில் மலர்வதே
தீபாவளி


தீபாவளி திருவிழா என்பது
மனித உயிரினங்களின் மனதின் தீபத்திருவிழா ஆனால் வளர்ந்து வரும் சமூகம்
வெடிகளும் வெளிச்சமும் தீபாவளி ஆகி விடுகிறது

ஆகவே மனித சமூகம் செயற்கை சுவாசிக்காமல்
இயற்கையான
 உள்ளம் என்னும் தீபத்தை மனதில் ஏற்றினால்
வாழ்க்கை ஒளியாகும்
இது உணர்ந்தால்
உங்கள் வாழ்க்கைக்கு வழியாகும் 


தீபாவளி வாழ்த்துகள்......



0 கருத்துரைகள்:

Post a Comment