Wednesday, December 1, 2010

வசந்த கால அலை

 அன்பும் அமைதியும் -என்னை
அழகானதொரு-அந்த
வசந்த காலத்திற்கு
கூட்டிச்செல்கிறது
அங்கே
கடல் அலையும்-என்
மன அலையும் 
மாறி மாறி
பயணிக்கிறது...
நினைவுகள் பல-என்
கண் இமைகளை தடவிச் செல்கிறது.
இருவிழி திறக்கும் முன்
இதயத்தின் ஊற்று திறந்து
அது பிறந்து
வசந்த கால அலை வீச தொடங்கியது.

Thursday, November 25, 2010

தமிழ் தேடல் அதை நாடல் கண் பாடல்

  தாயின் கருவறை
*நான் இந்த தமிழ் மண்ணில் பிறந்ததற்கு முக்கிய காரணமான என் தாயின் கருவறை தொட்டு வணங்கிய பிறகு எம்மை இன்றைக்கு இlணையத்தோடு இணைந்து வாழுங்கள் என்று கூறிய தமிழாசிரியர் முனைவர்இரா.குணசீலன் அவர்களின் வாழ்த்தோடு எம் தமிழ் தேடல் பயணத்தை துவங்குவதற்கு முன் நான் இன்றைக்கு இளங்கலைத் தமிழ் படிக்க உறுதுணையாக இருந்த எம் பள்ளி ஆசிரியர்களை நினைவு கூறும் இவ்வேளையில்...  நான் அவர்களையெல்லாம் பெயர் அடிப்படையில் அறிமுகப்படுத்துகின்றேன்.ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி.மொடக்குறிச்சி.தலைமைஆசிரியர்.செங்கோட்டையன்
1 -ஆம் வகுப்பு ஆசிரியர்- தங்கமணி
2-ஆம் வகுப்பு ஆசிரியர்-ரேவதி
3-ஆம் வகுப்பு ஆசிரியர்-கனகாபூசம்
4-ஆம் வகுப்பு ஆசிரியர்- பத்மாவதி
5ஆம் வ-குப்பு ஆசிரியர்-நாகலட்சுமி
இவர்கள் அனைவரும் என் தொடக்க கல்வி அளித்த  அன்னை தெய்வங்கள்.அடுத்ததாக மேல் நிலை ஆசிரியர்கள்,


அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.மொடக்குறிச்சி
தலைமையாசிரியர்.இரா.துரைசாமி அவர்கள்,
6-ஆம் வகுப்பு முதல் 12ஆம் ஆசிரியர்கள்;மாலா,சுமதி, அகிலன், இராமசங்கர்,காமராசு,பார்வதி,முருகேசன்,
கிறிஸ்டொபர்பெலிக்ஸ்,பிரிம்ரோஸ்,ஈஸ்வரமூர்த்தி, 
இராகவன்,நேரு,பழனிச்சாமி,கிரி,முனைவர்.ப.கந்தசாமி,பாரதி,யாஸ்மின்,மற்றும் எனக்கு தட்டச்சு கற்று கொடுத்த பானுமதி (  ஆய்வியல் பட்டயம ) ஆசிரியரின் நன்றியினை
இந்த நல்வேளையில் நினைக்கின்றேன்.

அதுமட்டுமல்லாது எமக்கு தமிழ் பால் ஊட்டிய ஆசிரியர்கள்
1.வெ.சுதா(தமிழ் இசையாசிரியர்)
2.மாதவன்(இலக்கயம்)
3.தமிழ் சிங்கம் வை.முருகேசன் (சங்க இலக்கியம்)
4.ஜே.குணாளன்(சங்க இலக்கியம்)
5.அ.கருப்புசாமி(தற்கால இலக்கியம்)எம் தமிழாசிரியர்கள் அளித்திட்ட தமிழ் உணர்வோடு நான் இன்றைக்கு கே.எஸ்.ஆர்.கலைமற்றும்அறிவியல் கல்லூரியில் (இளங்கலைத் தமிழ் இலக்கியம்)  இரண்டாமாண்டு பயில்வதற்கு காரணமான அனைத்து தமிழ்ப் பேராசிரியர்களின் நல்ல  உள்ளங்களின் வாழ்த்தோடும், எம் தமிழ்ப் பேராசிரியர் எழுதிய வாழ்த்து மடலோடும்
தமிழோடும்
தமிழ்ப் பிறந்த  மண்ணோடும்
தமிழ் மொழிச் சொல்லொடும்
பூவொடும் அது பிறந்த பொலிவொடும்
புது மணத்தொடும்
தமிழ் தேடலின் முதல் நாயகன்- என்
 மதன்குமாரோடு  கலந்த நான்
 தமிழ்தேடல் அதை நாடல் கண் பாடல் - என்ற
தாய்தமிழ் தேடலை  
இனிதே அவர்களின் திரு பாதம் தொட்டு துவங்குகின்றேன்

Wednesday, November 24, 2010

அழகோ அழகு

நெருப்பும் அழகு -அதை
காட்டும் நீயும் அழகு

வெறுப்பும் அழகு-அதை
வெளிப்படுத்தும்
வேடமும் அழகு

மொத்தத்தில் நீயே! அழகு
எதற்கு இந்த செயற்கை அழகு

இயற்கை அழகை நேசி-அதை
என்றும் சுவாசி.