*அன்று
வீடு நிறைய குழந்தைகள்
*இன்று
வீட்டுக்கொரு குழந்தை
*அன்று
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
*இன்று
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
*அன்று
படித்தால் வேலை
*இன்று
படிப்பதே வேலை
*அன்று
வீடு நிறைய உறவுகள்
*இன்று
நிறைய வீடுகள் உறவுகள் இல்லை
*அன்று
உணவே மருந்து
இன்று
மருந்துகளே உணவு
*அன்று
முதுமையிலும் துள்ளல்
*இன்று
இளமையிலேயே அல்லல்
*அன்று
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று
தொழில் நுட்பம் தான் எல்லாம்
*அன்று
யோக வாழ்க்கை
*இன்று
எந்திர வாழ்க்கை
*அன்று
தியாகிகள் நாட்டை காப்பாற்றினர்
*இன்று
அரசியல்வாதிகள் நாட்டை விற்கின்றனர்
*அன்று
படங்களில் ஒரு குத்து பாட்டு
*இன்று
குத்து பாட்டில் தான் படமே
*அன்று
ஓடினோம் வயிற்றை நிறைக்க
*இன்று
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
*அன்று
பெரியோர்கள் பாதையில்
*இன்று
இளைஞர்கள் போதையில்
*அன்று* @
ஒரே புரட்சி
*இன்று* @
ஒரே வறட்சி
*அன்று* @
சென்றார்கள் வளர்ச்சியில்
*இன்று*
செல்கிறது சினிமா கவர்ச்சியில்
*அன்று*
சட்டசபை
*இன்று*
சட்டை கிழியும் சபை
*அன்று*
மக்கள் நலன் ஆட்சி
*இன்று*
சிக்கல் தரும் ஆட்சி
*அன்று*
ஊரே கூட கோலாகல விழா
*இன்று*
ஊருக்கே போக முடியாத மூடுவிழா
*அன்று*
கைவீசி நடந்தோம்
*இன்று*
கைப்பேசியுடன் நடக்கிறோம்
*அன்று*
ஜனநாயகம்
*இன்று*
பணநாயகம்
*அன்று*
விளைச்சல் நிலம்
*இன்று*
விலை போன நிலம்
*அன்று*
தொட முடியாத உச்சத்தில் காதல்
*இன்று*
தொட்டு முடியும் எச்சம் காதல்
*அன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
*இன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.
*அன்று*
நிறைந்தது மகிழ்ச்சி
*இன்று*
நடக்குது வெற்று நிகழ்ச்சி
*அன்று*
வாழ்ந்தது வாழ்க்கை
*இன்று*
ஏதோ வாழும் வாழ்க்கை.
Wednesday, August 14, 2019
அன்றும் இன்றும்
Tuesday, August 6, 2019
தண்ணீர் பஞ்சம்
ஆத்தோரக்கிழவன்
அந்திசாயும் நேரம்
தண்ணீர் பாய்ந்த இடத்தில் கண்ணீரோடு .....
Saturday, June 15, 2019
படித்ததில் பிடித்தது.குமிழித் தூம்பு மதகு
குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தேவையான அளவு மட்டும் தண்ணீரை வெளியேற்ற உதவ, ஒரு கல் பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இந்த கல்பெட்டி மேலே அரையடி விட்டத்தில் துளை இருக்கும். இந்த துளைக்குப் பெயர் நீரோடி ஆகும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல் கொண்டு மூடி இருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு மூன்று துளைகள் இருக்கும் இவற்றை சேரோடி என்பர். ஏரியின் தரைமட்டத்திற்கு கீழே இந்த கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும்வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவர், அப்போது ஏரியின் நீரோடி துளை வழியாக 80 விழுக்காடு நீரும் சேரடி வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும்.[2] சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும்விதமாக கல் மண்டபங்கள் அமைத்திருப்பர்.
குமிழித்தூம்பு
தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு !
தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.
மதகை அடைத்துள்ள மூடுகல்லை பிணைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்.தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?
*ஆறகழூர் பொன்.வெங்கடேசன்*

