Sunday, October 23, 2011

எது தீபாவளி?

புத்தாடை உடுத்தி
புதுமையான நடைமுறையை பயன்படுத்தி -அதை
வாழ்வில் புகுத்தி
பூமியை நாசம் செய்வதா?
சப்தங்களும்,வெடிகளும்
சாலையில் சங்கீதம் பாடுவதா?

அணுகுண்டு வெடி
ஆட்களையே அலற செய்வதா!


நரகாசுரன் அழிவு

மக்கள் முகத்தில் மகிழ்ச்சி
இருள் விலகி
ஒளி வந்தது

இயற்கை ஒளி
செயற்கை ஒளியானதால்
நகரெல்லாம்
மாசுக்காற்றுக்கு ஒளிவந்தது

வாழ்க்கை
மனதில் ஒளியில்ல
வெடிகளும்,வெளிச்சமும்
பட்டாசு வந்ததால்
வேடிக்கையும்,விநோதமானது


எது தீபாவளி

மனதில் ஒளியில்லை

மண்ணில் மலர்வது ஒளியல்ல
மனதில் மலர்வது ஒளி
நினைவில் நிற்பது-அதன்
வளி
மனதில் உறைந்து
நாவினில் நிறைந்து
கண்ணில் கரைந்து-மற்றவர்
மனதில் மலர்வதே
தீபாவளி


தீபாவளி திருவிழா என்பது
மனித உயிரினங்களின் மனதின் தீபத்திருவிழா ஆனால் வளர்ந்து வரும் சமூகம்
வெடிகளும் வெளிச்சமும் தீபாவளி ஆகி விடுகிறது

ஆகவே மனித சமூகம் செயற்கை சுவாசிக்காமல்
இயற்கையான
 உள்ளம் என்னும் தீபத்தை மனதில் ஏற்றினால்
வாழ்க்கை ஒளியாகும்
இது உணர்ந்தால்
உங்கள் வாழ்க்கைக்கு வழியாகும் 


தீபாவளி வாழ்த்துகள்......



Friday, September 30, 2011

உலகில் மதிக்க முடியாதது

என் இனிய உறவுகளே
உங்கள் பண்பிற்கும் பாசத்திற்கும்
தலைவணங்கும்
தமிழ் மகன் பேசுகிறேன்

மனிதனின் மொத்தச் சொத்து
மன்னரால் மதித்த சொத்து
மக்களால் மலர்ந்த சொத்து

விண்ணிலும் மண்ணிலும் விளைந்த சொத்து
விலை கொடுத்து வாங்க முடியாத சொத்து

பகைவரால் பறிக்க முடியாத சொத்து
படாத துன்பம்- பல
பட்ட போதும்
பண்பால் படைத்த சொத்து
வாழ்நாளில் நம் வளர்ச்சிக்கு
வள்ளலாய் இருக்கும் சொத்து
உடலும் உயிரும்
உணர்வான சொத்து

உறவுகளோடு இணைந்து
உறவான சொத்து

எண்ணும் எண்ணம் எங்கும்
எழிலான சொத்து
கால ஏட்டில்
பதிவானது
நம் வாழ்வின்  பயணமானது
அன்னையின் உயிரானது
அகிலத்தின் வெளிச்சமான
மூன்றெழுத்து சொத்து
மூச்சான அன்பு சொத்து-அது
அனைவரின் சொத்து
எல்லா உயிரிடமும் அன்பு காட்டுவோம்
வாழும் நாளை வளமாக்குவோம்

Monday, September 26, 2011

அறிமுகம்

நண்பர்களே என் பெயர் மணிகண்டன்.

நான் கே.எஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோட்டில்

இளங்கலை தமிழ் பயின்று வருகிறேன்.

இயன்றவரை தமிழிலேயே பேசி வருகிறேன்..

என் தாய் மொழியின் பண்பாடுகளையும், இலக்கியங்களையும் அறிந்துகொள்வதிலும், அதைப் பகிர்ந்து கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..