ஆத்தோரக்கிழவன்
அந்திசாயும் நேரம்
தண்ணீர் பாய்ந்த இடத்தில் கண்ணீரோடு .....
Tuesday, August 6, 2019
தண்ணீர் பஞ்சம்
Saturday, June 15, 2019
படித்ததில் பிடித்தது.குமிழித் தூம்பு மதகு
குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தேவையான அளவு மட்டும் தண்ணீரை வெளியேற்ற உதவ, ஒரு கல் பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இந்த கல்பெட்டி மேலே அரையடி விட்டத்தில் துளை இருக்கும். இந்த துளைக்குப் பெயர் நீரோடி ஆகும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல் கொண்டு மூடி இருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு மூன்று துளைகள் இருக்கும் இவற்றை சேரோடி என்பர். ஏரியின் தரைமட்டத்திற்கு கீழே இந்த கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும்வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவர், அப்போது ஏரியின் நீரோடி துளை வழியாக 80 விழுக்காடு நீரும் சேரடி வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும்.[2] சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும்விதமாக கல் மண்டபங்கள் அமைத்திருப்பர்.
குமிழித்தூம்பு
தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு !
தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.
மதகை அடைத்துள்ள மூடுகல்லை பிணைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்.தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?
*ஆறகழூர் பொன்.வெங்கடேசன்*
Tuesday, May 7, 2019
அறிவோம்
🚩
கோவிலில் வழிபடும் முறைகள்🔯*
⚜குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும்.
⚜ கோவிலில் உள்ள குளத்தில், அல்லது அங்குள்ள தண்ணீர் குழாயில், கைகால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லவும்,
⚜ கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.
⚜முதலில் கோபுரத்தை வணங்கிவிட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்,
⚜ வணங்கும் போது (உள்ளங்கை கூடு) கோபுர கலசம் போல் இருக்க வேண்டும்.
⚜ இறைவனை தரிசனம் செய்துவிட்டு முன்னோக்கி செல்ல கூடாது,
பின்னோக்கி வந்து திரும்ப வரவேண்டும்,
முதுகுப்புறம் இறைவனுக்கு காண்பித்து வரக்கூடாது,
⚜ கொடிமரம் பலிபீடம் நமஸ்கரிக்க வேண்டும்,
⚜ சிவன் கோயில் என்றால் விநாயகரை முதலில் வணங்க வேண்டும்,
⚜ பெருமாள் கோயில் என்றால், கருடாழ்வாரையும் முதலில் வணங்க வேண்டும்,
⚜ கோவில் பிரகாரத்தை வலம் வர வேண்டும்,
⚜ கோவில் படியை தொட்டு நெற்றி புருவத்தில் மோதிரவிரலால் சற்று அழுத்த வேண்டும்,
படியை
தாண்டி செல்ல வேண்டும்,
⚜இறைவனுக்கு முன்னால் இருபுறமும் இருக்கக்கூடிய துவாரபாலகர் களிடம் அனுமதி பெற வேண்டும்,
⚜ சிவன் கோயில் என்றால்
சிவனை முதலில் தரிசிக்க வேண்டும்
பின்னர் அம்பாளை தரிசிக்க வேண்டும்,
⚜ பெருமாள் கோயில் என்றால்
தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்,
பின்னர் பெருமாளை சேவிக்க வேண்டும்,
⚜சிவன் கோவில் என்றால் வில்வத்தாலும்,
⚜பெருமாள் கோவில் என்றால் துளசியாலும்
அர்ச்சனை செய்ய வேண்டும்.
⚜ சிவன் கோயில் என்றால் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும்
⚜ பெருமாள் கோவில் என்றால் தீபாராதனையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.
⚜தீபாராதனையின் போது கண்களை நன்றாக திறந்து இறைவனை நன்றாக தரிசனம் செய்ய வேண்டும்,
கண்களை மூடிக்கொள்ள கூடாது.
⚜ கோவிலில் உள்ள எந்த சாமி சிலைகளையும் தொட்டு வணங்குதல் கூடாது,
⚜ கொடிமரத்திற்கு முன்னால் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்
⚜இறைவனுக்கு முன்னால் எதிரெதிரே நின்று தரிசிக்கக் கூடாது
⚜இறைவனுடைய கடைக்கண் பார்வை குளிர்ச்சியான பார்வையே நன்மை ,
⚜விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக்கரணம் போட வேண்டும்.
⚜விநாயகரை ஒரு முறையும்,
⚜சூரியனை 2 முறையும்,
⚜ அம்பாளையும், விஷ்ணுவையும் 4 முறையும்,
⚜ ஆஞ்சநேயரை 5 முறையும்,
🙏பிரதட்சணம் செய்ய வேண்டும்.
⚜மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது.
⚜ அபிஷேகத்தை கண்டால், அலங்காரமும் பார்க்க வேண்டும்.
⚜நமது வேண்டுதல்களை யெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.
⚜அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம்,
⚜நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.
⚜ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது.
⚜ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும்.
⚜ சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.
⚜ கோவிலில் கொடுக்கக்கூடிய குங்குமம், விபூதி,
வலதுகை
மோதிரவிரலால் அணிந்துகொள்ள வேண்டும்,
⚜விபூதி குங்குமத்தை வலது கையில் வாங்கியதும், இடது கையில் மாற்றி திரும்ப அணியக்கூடாது,
கிழக்கு முகமாக நின்று
அல்லது வடக்கு முகமாக நின்று,
இட்டுகொள்ள வேண்டும்,
⚜ இறைவன் சன்னதிக்கு முன்னால் அனுமதி கொடுத்தால்,
இறைவனை பற்றி பாடுவது மிகவும் சிறப்பு,
⚜ ஒருவர் இறைவனை தரிசனம் செய்யும்பொழுது குறுக்கே செல்லுதல் கூடாது,
இடையூறாக இருக்கவும் கூடாது,
⚜இறைவனின் முன் காயத்திரி மந்திரம் சொல்வது மிகவும் சிறப்பு,
⚜ கோவிலில் கொடுக்கக்கூடிய விபூதி , குங்குமத்தை, தூய்மையான எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரில் மடித்து வைத்துக் கொள்வது சிறப்பு,
⚜நியூஸ் பேப்பர் மற்ற தேவையற்ற செய்திகள் உள்ள பேப்பரில் விபூதி குங்குமம் மடித்து வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது,
⚜ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையை போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.
⚜கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.
⚜சண்டிகேஸ்வரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக்கூடாது.
⚜சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேஸ்வரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.
⚜சிவன் கோவிலில் காலபைரவரையும்,
⚜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.
⚜ சிவன் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பின்னர் வீட்டிற்கு செல்ல வேண்டும்,
⚜ பெருமாள் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டு விட்டு நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும், உட்காரக்கூடாது,
⚜கோவிலுக்கு சென்றுவிட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும்,
⚜ இப்படியெல்லாம் கடவுளை அனுஷ்டித்தால்,
⚜ குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
🕉🕉

